கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் : தி.மு.க. பிரமுகரின் கருத்துக்கு வி.சி.க. எதிர்ப்பு

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் : தி.மு.க. பிரமுகரின் கருத்துக்கு வி.சி.க. எதிர்ப்பு
x
வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை தனி மாவட்டமாக உருவாக்குவது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள்,மக்கள் பிரதிநிதிகள் பொது நல அமைப்புகள் பொதுமக்கள் என அனைவரிடமும் கருத்து கேட்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவினர் எழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க. வை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஆம்பூரை  தாழ்த்தப்பட்ட பகுதி என கருத்து தெரிவித்ததால்,  அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, ரமேஷ் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்