நீலகிரி கனமழை : சேதங்கள் மதிப்பீடு செய்த பிறகு மத்திய அரசிடம் உதவி கோரப்படும் - முதலமைச்சர்

வெள்ள சேத விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
x
நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செல்ல இருப்பதாக கூறினார். வெள்ள சேத விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்