முதுகெலும்பு பற்றி திமுக பேசுவதா? - தமிழிசை | Tamilisai Soundararajan

"இலங்கை தமிழர் படுகொலையின் போது முதுகெலும்பு எங்கே போனது?"
x
தமிழகத்துக்கு பாரபட்சமாக பா.ஜ.க. நடந்து கொள்ளாது என்று, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு தடை விதித்து அனுமதி மறுத்து உள்ளதை சுட்டிக்காட்டினார். இதன்மூலம், தமிழகத்தை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இலங்கை தமிழர் படுகொலையின் போது திமுகவின் முதுகெலும்பு எங்கே போனது என கேள்வி எழுப்பினார்.  திமுகவினர் பலர் அத்திவர‌தர் தரிசனத்திற்கு செல்வதை வரவேற்பதாக கூறிய தமிழிசை,  மதவெறி என்றால் என்னவென்று ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்