நீட் தேர்வு விவகாரம் : மாநிலங்களவையில் அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் புகார்
நீட் தேர்வு தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசு தலைவர் ஒப்புதல் நிராகரித்திருப்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என குற்றம் சாட்டினார்.
நீட் தேர்வு தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசு தலைவர் ஒப்புதல் நிராகரித்திருப்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என குற்றம் சாட்டினார். இதேபோன்று தி.மு.க. சார்பில் பேசிய திருச்சி சிவா, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக குடியரசு தலைவர் செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
Next Story