சுடச்சுட பதில் சொன்னால் தான், பத்திரிக்கைகளில் செய்தி : துரைமுருகன் புகாருக்கு முதலமைச்சர் பதில்

சுடச்சுட பதில் சொன்னால் தான் பத்திரிக்கைகளில் செய்தி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சுடச்சுட பதில் சொன்னால் தான், பத்திரிக்கைகளில் செய்தி : துரைமுருகன் புகாருக்கு முதலமைச்சர் பதில்
x
சுடச்சுட பதில் சொன்னால் தான் பத்திரிக்கைகளில் செய்தி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.  சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் கூட்டுறவு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் செங்குட்டுவன் பேசினார் அதற்கு அவ்வப்போது அமைச்சர்கள் குறுக்கிட்டு பதிலளித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், உறுப்பினர் பேசும் போது அமைச்சர்கள் குறுக்கிடுவது ஏற்புடையதல்ல என்றார். இதனால் உறுப்பினர் பேச அனுமதிக்கப்பட்ட நேரம் குறைய வாய்ப்புள்ளதாக அவர்  குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, தங்கள் உறுப்பினர் பேசும்போது அரசு மீது தொடர்ந்து குறைகளை சொல்லி வருவதாகவும், அந்த குற்றச்சாட்டுகளுக்கு சுடச்சுட உடனுக்குடன் பதிலளித்தால் தான் பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது என்றும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்