"சிலைகளை பாதுகாத்திட சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் உள்ள சிலைகளை பாதுகாத்திட மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
x
தமிழகத்தில் உள்ள சிலைகளை பாதுகாத்திட மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். பத்தாவது உலகத் தமிழர் மாநாடு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசுகையில், உலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொள்ளும் தமிழ் அறிஞர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றார். மத்திய இணையமைச்சர் பிரலாஸ் சிங், கோவில் சிலைகள் மாநில பட்டியலில் வருவதாக கூறியதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்