ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை

இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளா​ர்​.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை
x
இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளா​ர்​. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா, ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்கள், மத்திய பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக சார்பாக அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதனிடையே, இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து சட்ட நிபுணர்களுடன் விரிவாக ஆலோசிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்