சபாநாயகர் பதவி கிடைக்காததால் லட்சுமி நாராயணன் ஆதரவாளர்கள் அதிருப்தி

புதுச்சேரியில் காலியாக இருந்த சபாநாயகர் பதவிக்கு, துணை சபாநாயகராக இருந்த சிவகொழுந்து தேர்வாகி உள்ளார்.
சபாநாயகர் பதவி கிடைக்காததால் லட்சுமி நாராயணன்   ஆதரவாளர்கள் அதிருப்தி
x
புதுச்சேரியில் காலியாக இருந்த சபாநாயகர் பதவிக்கு, துணை சபாநாயகராக இருந்த சிவகொழுந்து தேர்வாகி உள்ளார்.  இதற்கிடையே, சபாநாயகர் பதவியை, காங்கிரஸ் எம்எல்ஏவும் முதல்வரின் பாராளுமன்ற செயலருமான லட்சுமி நாராயணனுக்கு வழங்குமாறு அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். தற்போது, சபாநாயகர் பதவி அளிக்காததால் லட்சுமி நாராயணனின் ஆதரவாளர்கள், அவரது இல்லம் மற்றும் காரில் பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்றினர். முதலமைச்சர் நாராயணசாமி உரிய பதில் அளிக்காததால், காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணனக்கு அரசு வழங்கிய கார் மற்றும் அலுவலக சாவியை சட்டப்பேரவை அலுவலகத்தில் அவரது ஆதரவாளர்கள் ஒப்படைத்தனர். இதனால், பரபரப்பு நிலவுகிறது. இது குறித்து, லட்சுமி நாராயணன் பதிலளிக்க மறுத்து விட்டார்.

Next Story

மேலும் செய்திகள்