"புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்" - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தகவல்

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தகவல்
x
புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் 5 நகராட்சிகள், 98 ஊராட்சிகள் ஆகியவற்றில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை உள்ளதாக கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக உள்ளாட்சி தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று கூறிய கிரண்பேடி, அது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்