பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை - மம்தா

பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் தான் பங்கேற்க போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.
x
பிரதமர் மோடி நாளை பதவியேற்க உள்ள நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சியில் தான் பங்கேற்க போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். முன்னதாக  பிரதமர் பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்பதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அதை மறுத்துள்ள அவர், பதவியேற்பு விழா அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கலவரங்கள் தமது கட்சியினரால் நிகழ்த்தப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டி வருவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயனும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்