வாரணாசிக்கு சென்றார் பிரதமர் மோடி - மக்கள் உற்சாக வரவேற்பு...

பிரதமர் மோடி வருகையை ஒட்டி உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி நகரம் விழாக்கோலம் பூண்டது.
வாரணாசிக்கு சென்றார் பிரதமர் மோடி - மக்கள் உற்சாக வரவேற்பு...
x
மக்களவை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றி பெற்றுள்ள பாஜக, ஆட்சியை தக்கவைத்துள்ளது. பிரதமராக 2வது முறையாக அரியணை ஏறும் மோடி, வரும் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாம் வெற்றிபெற்ற உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று  சென்றார். விமானம் மூலம் வாரணாசி சென்ற மோடியை அந்த மாநில ஆளுநர், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து, காசி விஸ்வநாத கோவிலுக்கு காரில் சென்ற மோடிக்கு, சாலைகளில் வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் மோடி... மோடி என உற்சாக குரல் எழுப்பினர்.

காசியில் பிரதமர் மோடி சிறப்பு பூஜை...



வாரணாசி காசி விஸ்வநாத கோவிலுக்கு சென்ற மோடி, அங்கு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகி​யோர் பங்கேற்றனர்.

விழாக் கோலம் பூண்ட வாரணாசி...



முன்னதாக, வாரணாசியில் மோடியை வரவேற்கும் விதமாக வீதியெங்கும் தோரணங்களும், மலர் மாலைகளும் கட்டி வாரணாசி வீதிகள் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டது. தெருக்களிலும் சாலைகளிலும் பாரம்பரிய கலைஞர்கள் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றி மகிழ்ந்தனர்.  

வாரணாசியில் பிரதமர் மோடி - மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் கருத்து


வாரணாசியில் பிரதமர் மோடி - கே.டி.ராகவன் கருத்து


வாரணாசியில் பிரதமர் மோடி - மூத்த பத்திரிகையாளர் மாலன் கருத்து


வாரணாசியில் பிரதமர் மோடி - வானதி ஸ்ரீனிவாசன் கருத்து





Next Story

மேலும் செய்திகள்