சூலூர் தொகுதியில் ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு...

ஸ்டாலின் நடைப் பயிற்சி மேற்கொண்டு பிரசாரம் செய்தபோது, அவருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
x
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் மேற்கொண்டார். அப்பநாயக்கன்பட்டி பகுதியில் நடைபயணம் மேற்கொண்டவாறு அவர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.  அதைத் தொடர்ந்து, ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். அதில் பங்கேற்ற மாணவிகள், கல்வி கடன் ரத்து, கேபிள் கட்டணம் குறைப்பு சம்பந்தமாக ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். மழை வந்தால் வீடுகள் சேதமாகிறது, யாரும் வந்து பார்ப்பதில்லை என தெரிவித்த பொமக்கள், அதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஸ்டாலின் நடைப் பயிற்சி மேற்கொண்டு பிரசாரம் செய்தபோது, அவருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்