புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிகுட்பட்ட 10-ம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் அதிகாரி ஆய்வு

புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிகுட்பட்ட 10-ம் எண் வாக்குச்சாவடியில் நடைபெற்று வரும் மறுவாக்குபதிவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்
புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிகுட்பட்ட 10-ம் எண் வாக்குச்சாவடியில்  மறுவாக்குப்பதிவு - தேர்தல் அதிகாரி ஆய்வு
x
புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிகுட்பட்ட 10-ம் எண் வாக்குச்சாவடியில் நடைபெற்று வரும் மறுவாக்குபதிவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம், என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர்  பார்வையிட்டனர். இதேபோல் வாக்குப்பதிவை ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இதனிடையே வாக்குச்சாவடி அருகே அதிக போலீசார் குவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேட்சை வேட்பாளரின் முகவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனிடையே வெயில் காரணமாக வாக்காளர்களுக்கு தேர்தல் துறை சார்பில் இலவசமாக மோர் வழங்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்