வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

வாக்கு எண்ணிக்கையை, வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், இந்திய கம்​யூனிஸ்ட், தி.மு.க. உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை
x
வாக்கு எண்ணிக்கையை, வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், இந்திய கம்​யூனிஸ்ட், தி.மு.க. உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. டெல்லியில், செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, வாக்கு எண்ணிக்கை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை, அவ்வப்போது, தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், அவர் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்