நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளிடம் சோதனை - இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
நீட் தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளிடம், தீவிரவாதிகள் போல் சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளிடம், தீவிரவாதிகள் போல் சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் க்ட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவிகளிடம் கம்மல், மூக்குத்தி அணிய கூடாது என்று கெடுபிடிகள் செய்யப்பட்டதாகவும், நீட் தேர்வில் பல குளறுபடிகள்
உள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.
Next Story