4 தொகுதி இடைத்தேர்தல் - வேட்புமனு : இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் தீவிரம்

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று, கடைசி நாள் என்பதால், வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
4 தொகுதி இடைத்தேர்தல் - வேட்புமனு : இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் தீவிரம்
x
4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று, கடைசி நாள் என்பதால், வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மே மாதம் 19ஆம் தேதி நடக்கிறது. இந்த தொகுதிகளில் போட்டியிட இதுவரை 98 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சனி, ஞாயிறு வங்கி விடுமுறை என்பதால் வேட்புமனுக்களை பெறக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று வேட்புமனு பெற கடைசி நாளாகும். திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே, வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கடைசி நாளான இன்று, அதிமுக, அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர். இதையடுத்து நாளை, வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2ஆம் தேதி கடைசி நாளாகும்... 

Next Story

மேலும் செய்திகள்