4 தொகுதி இடைத்தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை மே ஒன்றாம் தேதி தொடங்கிறார் ஸ்டாலின்

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மே ஒன்றாம் தேதி தொடங்கிறார்.
4 தொகுதி இடைத்தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை மே ஒன்றாம் தேதி தொடங்கிறார் ஸ்டாலின்
x
ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் சண்முகய்யாவை ஆதரித்து மே ஒன்று மற்றும் இரண்டாம் தேதி ஸ்டாலின் பிரசாரம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் சரவணனை ஆதரித்து, மே மூன்று, நான்கு ஆகிய தேதிகளிலும், சூலூர் தொகுதி வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, மே ஐந்து, ஆறு ஆகிய இரு தினங்களும், அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து, மே ஏழு, எட்டு ஆகிய இரண்டு நாட்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்