அ.தி.மு.க. பிரசார கூட்டத்தில் கல்வீச்சு, தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தியதாக புகார்

திருச்செந்தூர் அருகே அதிமுக பிரசார கூட்டத்தில் திமுகவினர் கல்வீசி தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
அ.தி.மு.க. பிரசார கூட்டத்தில் கல்வீச்சு, தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தியதாக புகார்
x
திருச்செந்தூர் அருகே அதிமுக பிரசார கூட்டத்தில் திமுகவினர் கல்வீசி தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. அடைக்கலபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம்  நடைபெற்றது. அப்பகுதியை சார்ந்த திமுகவினர் அங்கு வந்து கூட்டத்தில் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதை தட்டி கேட்ட அதிமுக பிரமுகர்களை அந்த கும்பல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கு காயம் ஏற்பட்டதாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்