கருணாநிதி குறித்து பேசி கண்கலங்கிய உதயநிதி...

கருணாநிதி மறைவு குறித்து பேசும் போது உதயநிதி கண்கலங்கியதால் அவரின் குரல் தழுதழுத்தது.
x
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவு குறித்து பேசும் போது, தி.மு.க  நட்சத்திர பேச்சாளர் உதயநிதி கண்கலங்கியதால், அவரின் குரல் தழுதழுத்தது. திமுக வேட்பாளர்கள் வேலுச்சாமி மற்றும் சௌந்தரபாண்டியன் ஆகியோரை ஆதரித்து வத்தலகுண்டுவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர்,  மறைந்த பிறகும் இடஒதுக்கீடுக்காக போராடிய தலைவர் கருணாநிதி என உருக்கமாக பேசினார்.  மேடையில் அமர்ந்து உதயநிதியின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, தி.மு.க கொறடா சக்கரபாணி ஆகியோர் முகத்தை மூடி அழுதனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் அமைதி நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்