மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்துக்களும் பாதிப்பு - திருமாவளவன்

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்துக்களும் பாதிக்கப்பட்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
x
மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்துக்களும் பாதிக்கப்பட்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணி சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரப் பொதுக்கூட்டம்  விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. அங்கு பேசிய திருமாவளவன், நடைபெற உள்ள தேர்தல் வழக்கமான தேர்தல் கிடையாது,  நாட்டுக்கு பெரும் தீங்கு செய்துவரும் மோடியை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் தேர்தல் என்றார். 

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே மத்திய பாஜக ஆட்சியின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து உருவாக்கப்பட்டது தி.மு.க. கூட்டணி, ஆனால், அ.தி.மு.க. கூட்டணி பேரத்தால் அமைந்த கொள்கை இல்லாத கூட்டணி என்றும் திருமாவளவன் விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்