பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் பாதுகாவலர் - பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா
பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர் பாதுகாவலராக இருப்பார் என அமித்ஷா கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சுந்தர்பனியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம் என்று குறிப்பிட்டார். அடுத்த 5 ஆண்டுகள் பாஜக ஆட்சி அமைந்தால் நாட்டின் ஒவ்வொருவருக்கு பிரதமர் மோடி பாதுகாவலாரக இருப்பார் எனும், எறும்பைப்போல, நாட்டுக்காக அயராது உழைப்பார் என்றும் கூறினார்
Next Story