நான் எப்படி ஓட்டு வாங்குவேன் - அமைச்சர் சரோஜா பேச்சால் சர்ச்சை

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனுக்கு வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி ராசிபுரத்தில் நடைபெற்றது.
x
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனுக்கு வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி ராசிபுரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக சத்துணவு துறை அமைச்சர் ராசிபுரத்திலுள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது, எனது கார் செல்லும்போதே கப்பலில் செல்வதுபோல் உள்ளது, இப்படி இருந்தால் நான் எப்படி ஓட்டு வாங்க முடியும் என்று முதலமைச்சரிடம் கூறியதாக தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சால், இத்தனை நாட்கள் இல்லாமல், ஓட்டு வாங்குவதற்காக சாலை போடுவதாக கூறுவதா என கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்