"எதையும் துணிச்சலாக பேசக் கூடியவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்" - ஸ்டாலின்

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்திருக்குமா என, திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
x
தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேனி தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருப்பது அவரது திறமையால் மட்டுமே என்றார். அதேநேரம், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்திருக்குமா எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்