பாஜக அரசை வெளியேற்றுவதே லட்சியம் - பிரகாஷ்ராஜ்

மத்திய பெங்களூருவில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்
பாஜக அரசை வெளியேற்றுவதே லட்சியம் - பிரகாஷ்ராஜ்
x
2009 ஆம் ஆண்டு, தொகுதி பிரிக்கப்பட்டது முதல் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் இந்த தொகுதியில்,மொத்த 21 லட்ச வாக்காளர்களில் ஆறு லட்சம் பேர் தமிழர்கள்.பாஜக குறித்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி வந்த பிரகாஷ்ராஜின் சொந்த ஊர் மத்திய பெங்களூரு என்பதால், அவர் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்து உள்ளதாக  தெரிவித்தார்.இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு திரும்பிய பிரகாஷ்ராஜை கண்டித்து பாஜகவினர் கூச்சலிட்டனர்.அவர்களை பார்த்து, மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா ? என்று கேள்வி எழுப்பிய பிரகாஷ்ராஜ், பாஜக அரசை வெளியேற்றுவதே தனது லட்சியம் என்று கூறி அங்கிருந்து கிளம்பினார். 

Next Story

மேலும் செய்திகள்