"அதிமுக-பாஜக கூட்டணியை பிளவுபடுத்த முயற்சி" - பொன் ராதாகிருஷ்ணன்

"முயற்சி தோல்வியடையும்"- பொன் ராதாகிருஷ்ணன்
x
அதிமுக, பாஜக கூட்டணியை பிளவுபடுத்த முயற்சி நடைபெறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தில் உண்மை இருப்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியை உடைக்கும் அந்த முயற்சி பெரிய தோல்வியை சந்திக்கும் என்றார்.  நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஓர் அணியில் சேரவேண்டும் என நினைப்பதாகவும், தேமுதிக தங்கள் கூட்டணியில் சேரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்