புதுச்சேரி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் நாராயணசாமி
x
புதுச்சேரி சட்டப்பேரவையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சரும், முதலமைச்சருமான நாராயணசாமி 2 ஆயிரத்து 703 புள்ளி 63 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக சபாநாயகர் வைத்திலிங்கம், திருக்குறள் வாசித்து, பேரவையை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீத்தா வேதநாயகம் மற்றும் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யாததை கண்டித்து, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், தொடர்ந்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்