"நாட்டு நலனை விரும்புகிறவர்கள் பா.ஜ.க கூட்டணியில் உள்ளனர்" - பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

நாட்டு நலனை விரும்புகிறவர்கள் பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளதாக, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
x
நாட்டு நலனை விரும்புகிறவர்கள் பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளதாக, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க அ.தி.மு.கவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். கூட்டணியை பற்றி திமுக தலைவர் ஸ்டாலினின் விமர்சனம் அநாகரிகமானது எனக் கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், நாட்டு நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் ஒரு கூட்டணியிலும், நாட்டு நலனை நினைப்பவர்கள் ஒரு அணியிலும் தேர்தலை சந்திக்க உள்ளனர் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்