திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு : இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு : இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
x
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதகள் ஒதுக்குவது என்பது குறித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத், பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். 

ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் திமுக எம்.பி. கனிமொழி இரண்டு முறை சந்தித்து பேசினார். பல மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் தொகுதி பங்கீட்டீல் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும். இது குறித்து சென்னையில் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்