காக்னிசன்ட் நிறுவன ஊழல் விவகாரம் : சிபிஐ அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் மனு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காக்னிசன்ட் ஊழல் குறித்து, திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காக்னிசன்ட் நிறுவன ஊழல் விவகாரம் : சிபிஐ அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் மனு
x
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காக்னிசன்ட் ஊழல் குறித்து, திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில், சிபிஐ இணை ஆணையரிடம் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், காக்னிசன்ட் ஊழல் குறித்து, அமைச்சர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பரசன், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சியும் செல்லாத கட்சிகள் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்