ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய கோரிக்கைகளை கிரண்பேடி திட்டமிட்டு புறக்கணிக்கிறார் - நாராயணசாமி

நேற்று முன்தினம் திடீரென, ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தை நாராயணசாமி தொடங்கினார்.
x
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாகவும், இலவச அரிசி, பொங்கல் பரிசு உள்ளிட்ட மக்கள்  நல திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுக்கப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டிவந்தார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென, ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ், திமுக எம்எல்ஏ-க்கள் பங்கேற்றுள்ள இந்த போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடருகிறது. நள்ளிரவிலும் சாலையிலேயே உறங்கியபடி போராட்டத்தை தொடருவதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

Next Story

மேலும் செய்திகள்