அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல்...

தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எங்களிடம் வர விருப்பம் தெரிவித்துள்ளனர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல்...
x
தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள்  எங்களிடம் வர விருப்பம் தெரிவித்துள்ளனர்  என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில், அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஜெயலலிதா பிறந்தநாளை விமரிசையாக மக்களுக்கு பயன்பெறும் வகையில் கொண்டாடுவது தொடர்பாக கூட்டத்தில் விவாதித்ததாக தெரிவித்தார். மக்களிட​த்தில் அரசின் திட்டங்களை கொண்டு செல்வது, பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் விவாதித்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.அ.தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணி ஒரு மெகா கூட்டணியாக அமையும் என்றும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலக்கத்தில் பேசி வருவதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்