"போலீஸ், சிபிஐ அரசின் அங்கம்தான்" - தினகரன்

"சி.பி.ஐ-யை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது" - தினகரன்
x
திருச்சியில் நடைபெற்ற அமமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டத்தில்,  அக்கட்சி துணை பொதுச் செயலாளர் தினகரன் பங்கேற்றார்.  செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல் துறை, சி.பி.ஐ உள்ளிட்டவை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகள் என்று சொல்லப்பட்டாலும் அவை அனைத்தும் அரசாங்கத்தின் அங்கங்கள் தான் என்றார். சி.பி.ஐ செயல்பாட்டை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது எனவும் குறிப்பிட்ட தினகரன்,  அரசு தங்களுக்கு கீழ் உள்ள விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்த கூடாது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்