"இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பேன்" - தினகரன்
திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டார். வையம்பட்டி, புத்தாநந்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், வேன் மீது ஏறி நின்றவாறு அவர் பிரச்சாரம் செய்தார். குக்கர் சின்னத்திற்காக வாக்கு சேகரித்த தினகரன், இரட்டை இலை சின்னத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மீட்டெடுக்கும் என பிரச்சாரத்தின்போது பேசினார்.
Next Story