ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிகளைத் தொடங்கி உள்ளனர்.
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு ஸ்டாலின் கண்டனம்
x
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர்ச்சியாக, மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிகளைத் தொடங்கி உள்ளனர். இதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். விளக்கம் கேட்க வந்த மீத்தேன் எதிர்ப்பு குழுத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன், ராஜூ ஆகியோரை கைது செய்திருப்பது கருத்துரிமையின் குரல் வளையை நெறிக்கும் செயல் என்றும், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமது பதிவில் அரசை ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்