கருணாநிதி சிலை தமிழகம் முழுவதும் திறக்கப்படும் : தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி கருணாநிதியின் சிலை, திறக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி சிலை தமிழகம் முழுவதும் திறக்கப்படும் : தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
x
அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி கருணாநிதியின் சிலை, திறக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், கருணாநிதிக்கு நாளை ஈரோட்டிலும், தமிழகம் எங்கும் அடுத்தடுத்தும் சிலைகள் திறக்கப்பட இருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவிலேயே மின்சாரம், குடிநீர், குடியிருப்பு, போக்குவரத்து, வேலைவாய்ப்பு என அனைத்து விதமான கட்டமைப்புகளும் கொண்ட கிராமங்களை உருவாக்கியவர் கருணாநிதி எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். மக்கள் பணியைத் தொடர்ந்து ஆற்றுவோம் எனவும், மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியே காட்டுவோம் எனவும் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்