"ராஜாத்தியம்மாளிடம் தொடர்பு வைத்திருந்தவர் சசிகலா" - முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேச்சு

"ஜெயலலிதா நிழலில் வாழ்ந்துகொண்டு..."
x
சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் காஞ்சி கிழக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிழலில் வாழ்ந்து கொண்டு அவரை ஏமாற்றி பல ஆயிரம் கோடி ரூபாயை சசிகலா சம்பாதித்ததாகக் குற்றம்சாட்டினார். ஜெயலலிதாவுக்கு, சசிகலா துரோகம் இழைத்துவிட்டு, ராஜாத்தியம்மாளிடம் தொடர்பு வைத்திருந்தார் எனக் கூறிய முனுசாமி, சசிகலா ஆட்சிக்கு வருவார் என ஸ்டாலின் நினைத்ததற்கு மாறாக தர்மம் வென்றது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்