பிரியங்கா காந்திக்கு தேசிய பொறுப்பு

பிரியங்கா காந்தி மற்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரை பொதுச் செயலாளர்களாக காங்கிரஸ் கட்சி இன்று நியமித்துள்ளது.
x
பிரியங்கா காந்தி மற்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரை பொதுச் செயலாளர்களாக காங்கிரஸ் கட்சி இன்று நியமித்துள்ளது. பிரியங்கா காந்திக்கு கிழக்கு உத்தரப்பிரதேச பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டணியால் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் இந்த முடிவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எடுத்துள்ளார். பிரியங்கா காந்தி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளது காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்