"பெரியார் விருது வழங்குவதில் எந்த சர்ச்சையும் இல்லை" - பொன்னையன்

பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவதில் தான் என்றும் முன் நிற்பவன் என்றும், அதனால் 'பெரியார் விருது' தனக்கு வழங்குவதில் எந்த சர்ச்சையும் இல்லை என பொன்னையன் கூறினார்.
x
பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவதில் தான் என்றும் முன் நிற்பவன் என்றும், அதனால் 'பெரியார் விருது' தனக்கு வழங்குவதில் எந்த சர்ச்சையும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறினார். எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை டிபி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கு பொன்னையன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனக்கு பெரியார் விருது வழங்குவதில் எந்த சர்ச்சையும் இல்லை என்றார். இந்த விருதுக்காக கி.வீரமணி தன்னை வாழ்த்தியதாகவும் பொன்னையன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்