"2021-லும் அதிமுக ஆட்சி அமையும்" - அமைச்சர் ஜெயக்குமார்

திமுக தலைவர் ஸ்டாலின், குறுக்கு வழியில் முதலமைச்சராக நினைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
x
திமுக தலைவர் ஸ்டாலின், குறுக்கு வழியில் முதலமைச்சராக நினைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றார். கொடநாடு விவகாரம் தொடர்பாக, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நீதிமன்றத்தில் அந்த வழக்கு உள்ளதால் அதுபற்றி கருத்து கூற முடியாது என்று தெரிவித்தார். வருகிற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்று, கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது, அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்