"நாங்கள் காங். எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசவில்லை" - எடியூரப்பா

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் பாஜக பேரம் பேசவில்லை என்றும், காங்கிரஸ் தான் பாஜக எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சித்தது என்றும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
நாங்கள் காங். எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசவில்லை - எடியூரப்பா
x
கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் பாஜக பேரம் பேசியதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மும்பையில் தங்கியிருப்பதும் உறுதியானது.  இந்தநிலையில், கட்சி கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள், டெல்லியிலேயே தங்கி இருந்தனர். இதனால், கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நிலவியது. பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ள நிலையில், டெல்லியில் தங்கியிருந்த பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா, பெங்களூரு திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக எம்.எல்.ஏக்களை இழுக்க காங்கிரஸ் தான் பேரம் பேசியதாகவும், காங்கிரஸின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் தெரிவித்தார். டெல்லியில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை பெங்களூரு திரும்பவுள்ளதாகவும் எடியூரப்பா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்