"திருவாரூரில் திமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

திருவாரூர் தொகுதியில் திமுகவை வெற்றி பெற வைக்க அனைவரும் பாடுபட வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் திமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
திருவாரூர் தொகுதியில் திமுகவை வெற்றி பெற வைக்க அனைவரும் பாடுபட வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 

* திருவாரூர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பூண்டி கலைவாணன், கட்சி நிகழ்வுகளை கூட மாநாடு போல நடத்திக் காட்டக் கூடியவர் என்றும், கஜா புயலின் போது களத்தில் நின்று வேலை பார்த்தவர் எனவும் தெரிவித்துள்ளார். 

* வேட்பாளர் பெயர் தான் கலைவாணனே தவிர, களத்தில் நிற்பது கருணாநிதி தான் எனவும், திருவாரூர் தொகுதிக்கு கருணாநிதி பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார். 

* திருவாரூரில் தி.மு.க.வை வீழ்த்தி, அதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ஒரு மாயையை உருவாக்கலாம் என மத்தியிலும் மாநிலத்திலும் இருப்பவர்கள் பகல் கனவு காண்பதாக கூறியுள்ள ஸ்டாலின், 

* திருவாரூரில் கருணாநிதியே போட்டியிடுகிறார் என்ற எண்ணத்தோடு விழிப்புணர்வோடு செயலாற்றுமாறு தெரிவித்துள்ளார். 

* திமுக ஆட்சி சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி திருவாரூரில் வெற்றி பெற பாடுபட வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்