மேகதாது விவகாரம்: "சுமூக தீர்வு காண முதலமைச்சர்கள் கூட்டம்" - கர்நாடகா முதலமைச்சரிடம் நிதின் கட்கரி உறுதி

மேகதாது அணை விவகாரத்தில், சுமூக தீர்வு காண இரு மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக நீர்பாசனம் மற்றும் தரைவழி போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மேகதாது விவகாரம்: சுமூக தீர்வு காண முதலமைச்சர்கள் கூட்டம் - கர்நாடகா முதலமைச்சரிடம் நிதின் கட்கரி உறுதி
x
டெல்லி சென்ற கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, மத்திய அமைச்சர் நிதின்கட்காரியை சந்தித்து பேசினார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதை குறிப்பிட்டு பேசிய குமாரசாமி, அங்கு அணை கட்டினால் தமிழகத்திற்கு தான் அதிக பயன் என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் இரு மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் நிதின்கட்காரி, தமிழகம் - கர்நாடகா மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக குமாரசாமியிடம் உறுதி அளித்துள்ளார். கர்நாடகா மாநில அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்