"தமிழகத்தில் 3-வது அணிக்கு வாய்ப்பில்லை" - காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் விளக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கட்சிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் தான் போட்டி, 3 வது அணி உருவாவதற்கான சாத்தியம் இல்லை என காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்தார்.
தமிழகத்தில் 3-வது அணிக்கு வாய்ப்பில்லை - காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் விளக்கம்
x
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான சஞ்சய் தத் ஆலோசனை செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் தத், தமிழகத்தில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் தான் போட்டி, 3 வது அணி உருவாவதற்கான சாத்தியம் இல்லை, மூன்றாவது அணி என்பது காற்று நிரப்பப்பட பலூன் போன்றது என்றும், எப்போது வேண்டுமென்றாலும் வெடித்து விடும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்