தம்பிதுரைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...

ஜெயலலிதாவின் மரணத்திற்கு தி.மு.க. தான் காரணம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தயாரா என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தம்பிதுரைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...
x
 * தமிழக மக்கள் மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாத அதிமுகவினர், தினமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

* கரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதை கண்டு மிரண்டு போன மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தேவையில்லாமல் பேசி வருவதாகவும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.

* ஜெயலலிதாவின் மரணத்திற்கு தி.மு.க. தான் காரணம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தம்பிதுரை தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ள ஆர்.எஸ். பாரதி,  அவ்வாறு அவர் தாக்கல் செய்தால், அவரிடம் பல குறுக்கு விசாரணைகளை செய்து, பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்