ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்ப்பு

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஒ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
x
தேனி மாவட்டத்தை சேர்ந்தவரும் , பெரியகுளம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான ஒ.ராஜா கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக அதிமுக 
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து கடந்த 19 ந்தேதி நீக்கப்பட்டார். 

இந்நிலையில் தனது செயலுக்கு நேரிலும் , கடிதம் மூலமும் ஓ.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளதாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஓ. ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவதாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்