"த.மா.காவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம்" - பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
"த.மா.காவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம்" - பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
ஜி.கே. வாசன் தலைமையில் இயங்கும் த.மா.காவுக்கு, மீண்டும் சைக்கிள் சின்னம் ஒதுக்க பரிசீலிக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்க மறுத்ததை எதிர்த்து, ஜி.கே. வாசன் தொடர்ந்த வழக்கு நீதிபதி ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, த.மா.காவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து, உத்தரவிட்டார். த.மா.காவின் கோரிக்கையை 8 வாரத்திற்குள் பரிசீலிக்கு முடிவு எடுக்குமாறும், தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Next Story