5 மாநில சட்டமன்ற தேர்தலில், காங்கிஸ் கட்சி முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்

5 மாநில சட்டமன்ற தேர்தலில், காங்கிஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதை, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
5 மாநில சட்டமன்ற தேர்தலில், காங்கிஸ் கட்சி முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்
x
மாமல்லபுரம்
சென்னை மாமல்லபுரம், கங்கை கொண்டான் மண்டபம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஈரோடு

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதால் பூங்காவுக்கு வந்த பொதுமக்களுக்கு அக்கட்சியினர் இனிப்புகளை வழங்கினர். 

பரமக்குடி 

பரமக்குடியில் பேருந்து நிலையம் அருகே, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் பட்டாசுகளை வெடித்தனர். மேலும், பேருந்துகளில் பயணித்தவர்களுக்கும் கூடி இருந்த பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. 

புதுக்கோட்டை

புதுக்கோட்டையிலும், காங்கிரஸ் கட்சியினர், வெடி வெடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, 5 மாநில தேர்தலில் முன்னிலை பெற்றதை காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடினர்.



Next Story

மேலும் செய்திகள்