நிவாரணப் பொருட்களை வழங்க வந்த உதயநிதி - தள்ளுமுள்ளுவில் இருவர் காயம்

உதயநிதியை காண அவரது ரசிகர்களும், திமுகவினரும் திரண்டு வந்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு.
x
நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டை வந்தார். தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த உதயநிதியை காண அவரது ரசிகர்களும், திமுகவினரும் திரண்டு வந்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் உதயநிதியின் பாதுகாவலர் இருதரப்பினரையும் ஒதுக்கிவிட்டு அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். இதில் இரண்டு ரசிகர்கள் காயமடைந்தனர். 

நிவாரணப் பொருட்கள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.  2 மணிநேரத்திற்கு மேல் நின்று அவரே நேரடியாக வழங்கியதால் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். தொடர்ந்து தஞ்சை நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் மன்னார்குடி அருகே நிவாரணம் வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டார். மக்கள் சாப்பிட அரிசி வேண்டும் என தெரிவித்ததை அடுத்து, 700 குடும்பத்திற்கு மாலைக்குள் அரிசி வீடு தேடி வரும் உறுதி அளித்ததை அடுத்து, மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்