தேசம் காப்போம் மாநாடு தள்ளிவைப்பு - திருமாவளவன்

தேசம் காப்போம் மாநாட்டை ஜனவரியில் நடத்த திட்டம் என திருமாவளவன் அறிவிப்பு
x
டிசம்பர் 10ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் ஜக்கிய முற்போக்கு கட்சிகளின் கூட்டம் நடைபெறுவதாலும், டெல்டா பகுதி புயலால் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதாலும், தேசம் காப்போம் மாநாட்டை தள்ளிவைப்பது என முடிவு செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். திருச்சியில் அக்கட்சியின் மாநில செயற்குழு சிறப்பு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி முதல் வாரத்தில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் அவர் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்