தேர்தலை கண்டு மத்திய - மாநில அரசுகளுக்கு பயம் - ஜி.ராமகிருஷ்ணன்

தேர்தலை ஒத்தி வைக்க கஜா புயலை காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல என ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு.
தேர்தலை கண்டு மத்திய - மாநில அரசுகளுக்கு பயம் - ஜி.ராமகிருஷ்ணன்
x
தமிழகத்தில், காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதி தேர்தலை ஒத்தி வைக்க கஜா புயலை காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வளர்ச்சிக்கான வாழ்வாதார கோரிக்கை மாநாட்டில் கலந்து கொண்ட ஜி.ராமகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, இவ்வாறு தெரிவித்தார். தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தேர்தலை கண்டு மத்திய- மாநில அரசுகள் பயப்படுவதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்